ஸ்ரீ வைத்தியநாதாஷ்டகம் தமிழ் மொழிபெயர்ப்பு
வணங்குவர், ராம லக்ஷ்மண, ஜடாயு
வேதம் போற்றும் உன்னை
வணங்குவர், ஷண்முகன், சூரியன், செவ்வாய்
தயாமூர்த்தி நீலகண்டன் உன்னை;
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்.
சிரசில் கங்கையும் பிறையும் தரித்தவனே
முக்கண்ணனே, காமனையும் காலனையும் எரித்தவனே
தேவர்களால் போற்றப்படுபவனே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
பக்தர்களின் அன்பனே திரிபுரம் அழித்தவனே
பினாகமெனும் வில்லேந்தி தீயோரை அழிப்பவனே
மானுடர் வாழ்வில் லீலைகள் புரிபவனே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
வாதம் முதலான நோய்களை அழிப்பவனே
மாமுனிகளால் வணங்கப்படுபவனே
சூரியன் சந்திரன் அக்னியை கண்களாய் நினைப்பவனே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
ஊமை, செவிடு, குருடரை பேச,கேட்க, பார்க்க வைப்பவனே
ஊனமுற்றோரை நடக்க வைப்பவனே
தீரா நோய் குஷ்டத்தையும் தீர்ப்பவனே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
அகிலத்தில் வியாபித்திருக்கும் உன்னை
அறியமுடியும் வேதாந்தத்தால்
மாமுனிகள் வணங்குவர் உன் தாமரை பாதங்களை
மும்மூர்த்தி ரூபன் உனக்கு ஆயிரம் நாமங்கள்
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
தீயவைதரும் இன்னல் தகர்ப்பாய்
துக்கமும் பயமும் தொலைப்பாய் குளத்தில் நீராடி கோயிலில் திருநீறு அணிவோர்க்கு;
மனித உடலில் இருக்கும் ஆத்மாவின் ஸ்வரூபமே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
கொடியில் ரிஷபம் கொண்ட நீலகண்டனே
மலர்கள் சந்தனம் திருநீரால் ஜொலிப்பவனே
நன் மனைவியும் மக்களும் அளிப்பவனே
வைத்தியநாதனுக்கு, சிவனுக்கு நமஸ்காரம்
பாலாம்பிகையுடன் உறை வைத்தியநாதனை போற்றி
இப்பாடலை மும்முறை ஜபிப்போர்க்கு
நோய்கள் நீங்கி ஜனன மரண பயம் விலகும்.
No comments:
Post a Comment